Monday, December 14, 2009

கேள்வியும் நாமே பதிலும் நாமே

கூட்டத்தில் நிற்க்கும் போது உன்னை கண் சிமிட்டாமல் பார்க்கும் நான்
கண் முன் நீ நிற்கும் பொது தலை குனிந்து போவது ஏன்?

இத்தனை நாள் உனது அழகில் பூரித்த நான்
இன்று உனது வெட்கத்தில் மயங்கியே போகிறேனடி!!

தலையணை கட்டிக்கொண்டு உன்னிடம் ஆயிரம் விஷயம் பேசும் நான்
உனது ஒரு கேள்விக்கு பதில் சொல்ல தலை மட்டும் அசைப்பது ஏன்?

மௌனம் என்ற மொழியை கற்று கொடுக்கும் உனக்கு
எனது இதயத்தின் மொழி கேட்டும் மறைப்பதேனடி!!

மனதின் சந்தோஷத்தை உன்னிடம் சொல்ல ஓடோடி வரும் நான்
உனது நண்பனிடம் சொல்லிவிட்டு அவன் உன்னிடம் சொல்வான் என திரும்புவது ஏன்?

நீ பக்கம் வந்தாலே சந்தோஷ படும் என்னை
இப்படி சந்தோஷத்துடன் ஓடி வந்து கொல்வதேனடி!!

உன் வாழ்த்துக்கு நன்றி என்ற ஒரு வார்த்தை சொல்லும் நான்
நாள் முழுதும் மனதிலும் இதழிலும் புன்னகை புரிவது ஏன்?

உனது முகத்தை மனதில் பத்திரபடுத்தி இருக்கும் நான்
உனது புன்னகையின் காரணத்தையும் உணர்வேனடி!!

இப்படி ஆயிரம் கேள்வி எனக்குள் கேட்கும் நான்
அதன் பதில் காதல் என ஒத்துகொல்லாதது ஏன்?

உன்னை காதலிக்கிறேன் என்று நான் சொன்ன உடன்
உண்மையை மறைக்க முயன்று தோற்று போவதேனடி!!

2 comments: